Thursday, March 20, 2008

Saturday, February 23, 2008

வீடுகாளாகும் விளைநிலங்கள்

நான் நகரத்தில் வசித்தாலும் கூட எங்கள் வீடு நகரத்தின் கடைசியில் இருந்ததால் கிராமத்திணுடான என்னுடைய தொடர்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. பள்ளி விடுமுறை நாட்களில் அருகில் இருந்த கிராமத்திற்குச் சென்று வயற்கிணற்றில் நண்பர்களுடன் மணிகணக்காக குளித்து ஆனந்தப்பட்டிருக்கிறேன். இவை எல்லாம் பத்து வருடத்திற்கு முன்னால் ஆனால் இன்று எங்கள் வீட்டிலிருந்து பத்து கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து விளைநிலங்களும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விட்டன கண்ணுக்கெட்டியரம் வரை தாரிசாக்கபட்ட விளைநிலங்கள், வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள், தண்ணீர் இறைக்கப்படாத வயற்கிணறுகள். இந்த இடங்களை கொஞ்சம் கொஞ்சமாக புதிய புதிய வீடுகள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன். இப்படித்தான் அனைத்து நகரங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன. மக்கட்தொகை பெருக்கத்திற்கேற்ப நகரங்கள் விரிவடைகின்றன. நகர்புறம் விரிவாக்கத்தின் உடனடியான பெரும் பாதிப்பை நம்மால் உணரமுடியாவிட்டாலும், இப்பாதிப்பு நம் சமூகத்தையும், நம் அடுத்த தலைமுறையையும் நிச்சயம் பாதிக்கும். இப்பொழுதே சில பாதிப்புகளை நம்மால் உணரமுடிகிறது மாசடைந்த காற்று, பாதாளத்திற்கே சென்றுவிட்ட நிலத்தடி தண்ணீர், அரிதாகிவரும் சில பறவை இனங்கள், விலங்குகள். குறைந்து வரும் மழை அளவு.

உதாரணத்திற்கு நான் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருந்நத காலங்களில் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னால், தவிட்டுக்குருவி என்ற ஒரு குருவி வகை பறவை எங்கள் வீட்டு படுக்கை அறையில் கூடுகட்டி இருந்தது. நாங்கள் சன்னலை அடைப்பதற்கு முன்னாலே மாலை 5 மணிக்கெல்லாம் தன் கூட்டிற்கு வந்துவிடும் அதேபோல் காலை 5 ½ மணிக்கெல்லாம் விழித்துக் கொண்டுவிடும். சன்னலை திறக்கும் வரை கத்திக் கொண்டே இருக்கும் சன்னலை திறந்தவுடன் செல்லும் குருவி மாலைதான் திரும்ப வரும். தன் கூட்டில் குஞ்சு பொறித்த காலங்களில் மட்டும் அடிக்கடி கூட்டிற்கு வரும். அப்றவையினால் எங்களுக்கு சில அசௌகரியங்கள் இருந்தாலும் கூட அப்பறவையே தன் வருகையை நிறுத்திக் கொள்ளும் வரை நாங்கள் அதற்கு எந்த தொந்தரவும் கொடுத்தில்லை. அப்பறவையினத்தை சில வருடங்களாக தேடிப்பார்க்கிறேன் அப்பறவையினை எண்ணால் எங்கள் பகுதியில் காணமுடியவில்லை. இப்பறவையினம் அழிந்து விட்டதா? அல்லது இடம் பெயர்ந்து விட்டதா என்று தெரியவில்லை.

எங்கள் வீட்டுக்கருகில் ஒரு சிறிய குளம் ஒன்று இருந்தது அதனால் எங்கள் வீட்டுக் கிணற்றில் எக்காலத்திலும் தண்ணீர் மேல் மட்டத்திலே இருக்கும். ஆனால் இன்று அக்குளம் நகராட்சியின் வரைபடத்தில் மட்டுமே உள்ளது முற்றிலுமாக ஆக்ரமிப்பாளர்களால் ஆக்ரமிக்கப்பட்டுவிட்டது. இதனால் எங்கள் கிணறு வெயில் காலங்களில் வற்றிவிடுகிறது.
இது போல் நிறைய விஷயங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமலேயே நாம் வாழந்து கொண்டிருக்கிறோம்.

நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழக்கையைத்தான் வாழந்தார்கள், நாம் வாழ்வதற்கு நல்ல உலகத்தைத்தான் விட்டுச்சென்றார்கள். ஆனால் நாம் அடுத்த தலைமுறையினருக்கு வாழத்தகுதியற்ற உலகத்தைத்தான் விட்டுச்செல்லப்போகிறோம்.
அறிவியல் வளர்ச்சியினால் நம் ஆயுக்காலம் வேண்டுமானால் நீண்டிருக்கலாம். நம்முடைய சொகுசு வாழ்க்கைக்காக இந்த உலகத்தை சுரண்டிக் கொண்டிருக்கிறோம்.

சிந்திப்போம் ! இந்த உலகத்தை காப்பாற்றுவோம்.

Monday, February 11, 2008

காலி கோப்பை - ஜென்

ஒரு ஜென் ஆசிரியர் வெகு அமைதியாய் மக்களுக்கு ஜென் பற்றி போதித்துக் கொண்டு இருந்தார். அதனால் அவருக்கு அந்த வட்டாரத்தில் தனிப்பெருமையும் செல்வாக்கும் இருந்தது. அந்த நாட்டு பேரறிஞர் என அரசனிடம் பட்டம் வாங்கிய ஒருவருக்கு இது பொறுக்கவில்லை. உடனே அவர் ஜென் என்பது வெறும் பம்மாத்து வேலை. அதை பொய் என்று நிருபித்து காண்பிக்கிறேன் என்று கூறி ஆசிரியரை வாதுக்கு அழைத்து ஜென் என்றால் என்ன என்று சொல்லுங்கள் என்றார். ஆசிரியரும் அந்த அறிஞரைத் தன் குடிலுக்கு அழைத்து சென்று அமரவைத்து ஜப்பானிய முறையில் டீ உபச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தேவையான எல்லா பொருள்களையும் அவர் முன்னே வைத்து கோப்பையில் முறைப்படி தேநீர் வார்க்க ஆரம்பித்தார். கோப்பை நிரம்பிய பின்னும் ஊற்றிகொண்டே இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க இயலாத அந்த அறிஞர் "நிரம்பிய பின்னும் ஊற்றுகிறீர்களே இது எப்படி சரி பட்டு வரும் முதலில் கோப்பையில் இருப்பதை நான் காலி செய்த பிறகு ஏன் மறுபடி நிரப்ப கூடாது?" எனக் கேட்க.. ஜென் ஆசான் பதிலிறுத்தார்."அய்யா நீங்களும் இந்தக் கோப்பையும் ஒன்று, முதலில் உள்ளே உள்ளதை வெறுமையாக்குங்கள் அப்புறம் நிரப்பத் துவங்கலாம்" என்றார்.

ஜென் என்றால் என்ன?

ஜென் என்றால் என்ன?.." கேள்வி எழுந்தது ஒரு மாணவனிடமிருந்து. துறவி அவனைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார்"யாரும் அதை தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்"மாணவன் விடுவதாய் இல்லை "அப்படியனால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?""zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை"."அப்படியானால்....." மாணவன் இழுத்தான்..."சும்மாயிரு.." வெகு வேகமாய் குருவின் குரல்.மாணவன் தெளிந்தான்.

Wednesday, February 6, 2008

வேப்ப மரத்தில் பால் வடிந்த கதை

எங்கள் ஊரில் ஒரு வேப்ப மரத்தில் வெண்மை நிற திரவம் சுரந்தது அது ஒரு இயற்கையான நிகழ்வானாலும் கூட திரளான மக்கள் வந்து பார்த்து விட்டு வேப்ப மரத்தில் பால்வடிவதாகவும் அந்த வேப்ப மரத்திற்கு ஏதோ தெய்ய சக்தி இருப்பதாகவம் சொல்லி அதை வழிபடத்தொடங்கி விட்டார்கள். இதுகூட பரவாயில்லை உள்ளூர் பத்திரிக்கைகள் அதை படமெடுத்து அதை முதல் பக்க செய்தியாக்கி விட்டார்கள்.

அறிவியல் வியக்கத்தகுந்த அளவிற்கு வளாந்து விட்ட இந்த காலத்தில் கூட இந்த மாதிரியான நிகழ்சிகளுக்கு மக்களும் பத்திரிகைகளும் முக்கியத்துவம் தரத்தான் செய்கின்றன்.


Free Blogger Templates by Isnaini Dot Com. Supported by Interior Design. Powered by Blogger